வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மலையாள திரையுலகில் கடந்த 15 வருடங்களாக நடிகர் சங்க தலைவராக இருந்து வந்த இன்னொசன்ட் சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விலகினார். தற்போது புதிய தலைவராக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்ற தினத்தில் இருந்தே பிரச்சனைகள் களைகட்ட தொடங்கிவிட்டன.
கடந்த வருடம் நடிகை வழக்கில் சிக்கி, நடிகர் சங்கத்தில் இருந்து விலக்கப்பட்ட நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது, தலைவரான மோகன்லால் மீது பலருக்கும் மிக பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சங்கத்தின் இந்த முடிவிற்கு, எதிர்ப்பு தெரிவித்து சில நடிகைகள் சங்கத்தில் இருந்து விளகியுள்ளனர். மேலும் சில நடிகைகள் திலீப்பை சங்கத்தில் சேர்ப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இதைப்பற்றி எல்லாம் மோகன்லால் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய மோகன்லால், "நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல. அன்று நடந்த பொது குழுவில் கலந்துகொண்ட அனைவரும் ஒருமனதாக எடுத்த ஏகோபித்த முடிவுதான். அந்த பொது குழுவில் கலந்து கொள்ளாத சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற சங்கத்திற்கு எதிராக தேவையில்லாத விஷயங்களை பரப்பி சர்ச்சைகளை கிளப்பிவருகின்றனர். அவர்களை நாம் கண்டுகொள்ள தேவையில்லை என கூறியுள்ளார்.