ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர்கள் அரசியலில் ஈடுபடுபது தென்னிந்தியாவில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நடிகர்கள் முதல்வர்களாகவே பணியாற்றி உள்ளார்கள். தமிழ் சினிமாவில் நடிகராக இருந்த எம்ஜிஆர்., நடிகையாக இருந்த ஜெயலலிதா ஆகியோர் தமிழக முதல்வர்களாக பணியாற்றி இந்திய அரசியலிலும் கவனிக்கப்படுபவர்களாக இருந்தனர்.
ஆந்திராவில் என்டிஆர் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்து முதல்வராகப் பணியாற்றி மறைந்தார். அவருடைய மறைவுக்குப் பின் மருமகன் சந்திரபாபு நாயுடு கட்டுப்பாட்டில் கட்சி வந்தது. தற்போது அவர் ஆந்திரா முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை ஆரம்பித்து தேர்தலில் நின்றார். அதன்பின் கட்சியைக் காங்கிரசுடன் இணைத்தார். இருப்பினும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. இப்போது சிரஞ்சீவியின் கடைசி தம்பியான பவன்கல்யாண் 'ஜனசேனா' கட்சியை ஆரம்பித்து பல்வேறு பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து வருகிறார்.
அடுத்து ஆந்திரா, தெலுங்கானாவில் நடைபெற உள்ள தேர்தலில் பவன்கல்யாண் கட்சி பெரிய வெற்றி பெற அதற்கான திட்டங்களை அமல்படுத்த சிரஞ்சீவி இப்போதே இறங்கிவிட்டார் என்கிறார்கள். அவர்களுடைய குடும்பமே பவன்கல்யாணை முதல்வராக்க வேண்டும் என பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்களாம்.