வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மலையாளத்தில் கடந்தாண்டு வெளியான டேக் ஆப் படத்தை தொடர்ந்து பார்வதி நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை..அவரும் வதவதவென படங்களை ஒப்புக்கொள்ளாமல் செலக்டிவாகத்தானே நடிக்கிறார்.. அந்த இடைவெளியை போக்கும் விதமாக தற்போது பிருத்விராஜூடன் இணைந்து மை ஸ்டோரீஸ் மற்றும் கூடே என இரண்டு என்கிற படங்களில் நடித்துள்ளார் பார்வதி.
இதில் கூடே படம் வரும் ஜூலை-6ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் மலையாள இயக்குனர் ரஞ்சித் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் நடித்த நாட்களில் ரஞ்சித்திற்குள் மறைந்திருந்த நடிப்பாற்றலை கண்டு ஆச்சர்யப்பட்ட பார்வதி, "நீண்ட நாளைக்குப்பிறகு திரையில் இப்படி ஒரு அற்புதமான தந்தை கேரக்டரை கண்டேன்.. படத்தின் இயக்குனர் அஞ்சலி மேனனும் இயக்குனர் ரஞ்சித்தும் சேர்ந்து அந்த அலோஷி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்கள்" என சிலாகித்து பாராட்டியுள்ளார் பார்வதி.