இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் மலையாள நடிகர் ஜெயசூர்யா, தற்போது 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார். இந்தப்படம் நேற்று முன்தினம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் முதல்நாள் முதல் காட்சியை எர்ணாகுளம் பத்மா தியேட்டரில் 50 திருநங்கைகளுடன் பார்த்து ரசித்தார் ஜெயசூர்யா.
ஜெயசூர்யாவின் கதாபாத்திரம் அடிக்கடி சிவப்பு சேலை அணிந்திருக்கும் என்பதால் இந்த 50 திருநங்கைகளும் சிவப்பு நிற உடையணிந்து இந்த திரைப்படத்தை காண வந்திருந்தனர். படத்தை பார்த்துவிட்டு, "திருநங்கைகள் மீது மக்கள் கொண்டு இருக்கும் தவறான அபிப்ராயம், கண்ணோட்டத்தை இந்த படம் மாறும்.. எங்களை மிகவும் கௌரவப்படுத்தியுள்ளனர்" என திருநங்கைகள் பாராட்டியுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கூட திருநங்கைகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு அவர்களில் ஐந்து பேரை மேடையேற்றி டிரைலரை வெளியிட வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.