விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தமிழில் சிலகாலம் அஞ்சலியின் மார்க்கெட் சரிந்து கிடந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய படங்களில் கமிட்டாகி பிசியான நடிகையாகிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், விஜய் ஆண்டனியுனுடன் நடித்த காளி படத்தை அடுத்து நாடோடிகள்-2, பேரன்பு, காண்பது பொய், லிசா மற்றும் விஜய் சேதுபதியுடன் ஒரு படம் என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், 2014-ல் தெலுங்கில் கீதாஞ்சலி என்ற ஹாரர் படத்தில் நடித்தார் அஞ்சலி. அந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் அஞ்சலி தான் லீடு ரோலில் நடிக்கிறாராம்.
இந்த படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக காமெடியன் ஸ்ரீனிவாச ரெட்டி முதல் பாகத்தில் நடித்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் அவருக்கு பதிலாக வேறு நடிகர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.