பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாகுபலி நாயகன் பிரபாஸ், தற்போது சாஹோ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். மேலும், பாகுபலிக்குப்பிறகு பிரபாசுடன் நடிக்க இந்திய அளவில் உள்ள பல முன்னணி நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்ஜனா உள்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்வரா பாஸ்கரும் பிரபாசுடன் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஐதராபாத்துக்கு வந்த இவர் மீடியாக்களை சந்தித்தார் அப்போது, பிரபாஸ் என்னை கவர்ந்த நடிகர். அதனால் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்று கூறிய ஸ்வரா பாஸ்கர், நான் இந்தி படங்களில் நடித்து வந்தபோதும் எனது தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர் தான் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.