விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் பெங்களூர் டேய்ஸ் படம் உருவாக்கிக் கொண்டிருந்த சமயத்தில் அதில் ஜோடியாக நடித்து வந்த பஹத் பாசில் - நஸ்ரியா இருவரிடமும் காதல் மலர்ந்ததை முதல் ஆளாக கண்டுபிடித்தவர் அந்தப்படத்தின் இயக்குனர் அஞ்சலி மேனன் தான். அதன்பின் அவர்கள் திருமணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்தப்படத்தின் படப்பிடிப்பின் கடைசி நாளின்போது, "இனி திருமணம் செய்துகொண்டால் நஸ்ரியா நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவாரா" என பஹத் பாசிலிடம் கேட்டாராம் அஞ்சலி மேனன்.
உடனே கோபமான பஹத் பாசில், நானொன்றும் அவ்வளவு குறுகிய மனம் கொண்டவன் அல்ல. தொடர்ந்து நடிப்பதும் நடிக்காததும் நஸ்ரியாவின் விருப்பம். ஆனால் என்னை பொறுத்தவரை நஸ்ரியா தொடர்ந்து நடிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.. வேண்டுமானால் உங்கள் அடுத்த படத்தின் கதாநாயகியாக நஸ்ரியாவை இப்போதே ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள் என கூறினாராம்.
அந்தப்படம் வெளியாகி சுமார் மூன்று வருடங்கள் கடந்த நிலையில், தனது இரண்டாவது படத்தை துவங்கிய அஞ்சலி மேனன், அந்த படத்தில் நஸ்ரியா நடிக்க வேண்டும் என பஹத் பாசிலிடம் வேண்டுகோள் வைத்தாராம். உடனே பஹத் பாசில், "நான் அன்றே சொன்னது தான்.. அதில் எந்த மாற்றமும் இல்லை.. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நஸ்ரியாவை படப்பிடிப்புக்கு அழைத்து செல்லலாம்" என க்ரீன் சிக்கினால் காட்டினாராம். இந்த தகவலை நேற்றுதான் பகிர்ந்து கொண்டுள்ளார் அஞ்சலி மேனன். இதோ அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.