இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் பெங்களூர் டேய்ஸ் படம் உருவாக்கிக் கொண்டிருந்த சமயத்தில் அதில் ஜோடியாக நடித்து வந்த பஹத் பாசில் - நஸ்ரியா இருவரிடமும் காதல் மலர்ந்ததை முதல் ஆளாக கண்டுபிடித்தவர் அந்தப்படத்தின் இயக்குனர் அஞ்சலி மேனன் தான். அதன்பின் அவர்கள் திருமணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்தப்படத்தின் படப்பிடிப்பின் கடைசி நாளின்போது, "இனி திருமணம் செய்துகொண்டால் நஸ்ரியா நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவாரா" என பஹத் பாசிலிடம் கேட்டாராம் அஞ்சலி மேனன்.
உடனே கோபமான பஹத் பாசில், நானொன்றும் அவ்வளவு குறுகிய மனம் கொண்டவன் அல்ல. தொடர்ந்து நடிப்பதும் நடிக்காததும் நஸ்ரியாவின் விருப்பம். ஆனால் என்னை பொறுத்தவரை நஸ்ரியா தொடர்ந்து நடிக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.. வேண்டுமானால் உங்கள் அடுத்த படத்தின் கதாநாயகியாக நஸ்ரியாவை இப்போதே ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள் என கூறினாராம்.
அந்தப்படம் வெளியாகி சுமார் மூன்று வருடங்கள் கடந்த நிலையில், தனது இரண்டாவது படத்தை துவங்கிய அஞ்சலி மேனன், அந்த படத்தில் நஸ்ரியா நடிக்க வேண்டும் என பஹத் பாசிலிடம் வேண்டுகோள் வைத்தாராம். உடனே பஹத் பாசில், "நான் அன்றே சொன்னது தான்.. அதில் எந்த மாற்றமும் இல்லை.. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நஸ்ரியாவை படப்பிடிப்புக்கு அழைத்து செல்லலாம்" என க்ரீன் சிக்கினால் காட்டினாராம். இந்த தகவலை நேற்றுதான் பகிர்ந்து கொண்டுள்ளார் அஞ்சலி மேனன். இதோ அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.