ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவின் மிக முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் தான் கணேஷ்குமார். மலையாள நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அதுமட்டுமல்ல இவர் ஒரு எம்.எல்.ஏவும் கூட.. மூன்றுமுறை எம்.எல்.ஏவாக தேர்வான கணேஷ்குமார், இன்று காலை, தனது டிரைவருடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை அவரது தாயின் கண் முன்னே தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை கொல்லம் பகுதியில் ஒரு துக்க வீட்டிற்கு துக்கம் விசாரிக்க தனது காரில் சென்றார் கணேஷ்குமார். அந்த வீட்டை நெருங்கும்போது அதே வீட்டிலிருந்து கிளம்பி, தனது தாயுடன் வந்த அனந்தகிருஷ்ணன் என்கிற இளைஞர் தனது வாகனத்தை கணேஷ்குமார் காரின் முன்னால் நிறுத்தியதால் வழிவிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கோபத்துடன் காரில் இருந்து இறங்கிய கணேஷ்குமார் அந்த இளைஞரை அவரது தாயின் கண்முன்னே கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். உடன் கணேஷ்குமாரின் டிரைவரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளார். தாக்கப்பட்ட நபர் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிசை பெற்று வருகிறார்.