'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒரு காலத்தில் ஹிந்தித் திரையுலகத்தில் மணிரத்னத்திற்குப் பிறகு பேசப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. சமீபகாலங்களில் தெலுங்கில் எந்தப் படம் வெளிவந்தாலும் அதைக் கிண்டலடித்து டுவீட் போடுவது, அந்தப் படத்தில் நடித்த முன்னணி நடிகர்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சிப்பது என தேவையில்லாத பல விஷயங்களைச் செய்தார். இப்போது அவருடைய படத்தையே தேவையில்லாத படம் என தெலுங்கு ரசிகர்கள் ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.
ராம்கோபால் வர்மா இயக்கத்தில், நாகார்ஜுனா, மைரா சரீன் மற்றும் பலர் நடித்து ஜுன் 1ம் தேதியன்று வெளிவந்த படம் 'ஆபீசர்'. படம் வெளியான முதல் நாளிலேயே இந்தப்படம் ஒரு 'பிளாப்' படம் என ரசிகர்கள் முத்திரை குத்திவிட்டார்கள். தியேட்டர் பக்கம் யாருமே வராததால் படம் படுதோல்வி என்று கூட சொல்ல முடியாமல் படு பயங்கரத் தோல்வியடைந்தது.
இப்படத்தின் மொத்த வசூல எவ்வளவு என்பது பற்றி இப்போதுதான் தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் சேர்த்து இந்தப் படம் மொத்தமாக இரண்டு கோடி கூட வசூல் செய்யவில்லையாம். வெறும் 90 லட்சம் மட்டுமே ஷேர் ஆக வந்துள்ளது. நாகார்ஜுனா, ராம்கோபால் வர்மா ஆகியோரது படங்களிலேயே மிக மிக மோசமான வசூல், சமீப காலத் தெலுங்குப் படங்களில் மிக மிக மோசமான வசூல் என 'ஆபீசர்' படத்தைக் குறிப்பிடுகிறார்கள்.
ராம்கோபால் வர்மா இனிமேல் மற்ற படங்களைக் கிண்டலடிப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்வது அவருக்கு நல்லது.