பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள நடிகை மேகா மேத்யூ சாலை விபத்தில் சிக்கி ஒரு மணிநேரம் காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார். அவரை ஒரு பத்திரிகை புகைப்பட கலைஞர் மீட்டு கொச்சியில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேகா தற்போது உடல் நலம் தேறி வருகிறார். விபத்து குறித்து மேகா கூறியதாவது:
அண்ணனின் திருமண நிச்சயதார்த்திற்கு சென்றபோது தான் விபத்து நடந்தது. என் கார் மீது மோதிய கார், நான் என்ன ஆனேன் என்பதை பற்றி கவலைப்படாமல் நிற்காமல் சென்று விட்டது. தலைகுப்புற கவிழ்ந்த காரிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தேன். கைகால்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் ஒடியது. இன்று நமக்கு மரணம்தான் என்றே முடிவு செய்தேன்.
சுற்றிலும் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்தேன். எனது வேதனை குரல் அவர்களுக்கு கேட்கவில்லை. என்னை காப்பாற்ற முயற்சிக்காமல் செல்போனில் போட்டிபோட்டு படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். கடைசியாக போட்டோகிராபர் வந்து தான் என்னை காப்பாற்றினார். செல்போன் மோகம் மக்களின் மனிதாபிமானத்தை மறைத்து விட்டதாகவே நினைக்கிறேன். என்கிறார் மேகா மேத்யூ.