பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வரும் ஜூன்-7ஆம் தேதி ரஜினியின் காலா ரிலீஸாவதை அடுத்து மலையாள திரையுலக ஜாம்பவான் நடிகர்கள் கூட ஜூன்-14லிருந்து தான் தங்களது படங்களை ரம்ஜான் ரிலீஸாக வெளியிட இருக்கிறார்கள். இதில் மோகன்லாலின் நீராளி, மம்முட்டியின் ஆப்ரஹாமிண்டே சந்ததிகள், பிருத்விராஜின் மை ஸ்டோரி , ஜெயசூர்யாவின் ஞான் மேரிக்குட்டி ஆகிய படங்கள் தங்கள் ரிலீஸை உறுதி செய்திருந்தன.
இந்தநிலையில் மோகன்லாலின் நீராளி படம் ஜூலை -12க்கு தள்ளிப்போகிறது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் சமீபகாலமாக அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் நிபா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாமல் இருப்பதால் இந்தசமயத்தில் தனது படத்தை வெளியிட வேண்டாம் என மோகன்லால் முடிவெடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. பாலிவுட் இயக்குனரான அஜய் வர்மா இயக்கியுள்ள இந்தப்படத்தில் நதியா, பார்வதி நாயர் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.