ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
மலையாள சினிமாவை பொறுத்தவரை கதாநாயகிகளுக்கு வயதாகிவிட்டது என ஒதுக்கும் வேலையெல்லாம் இல்லை. அதனால் தான் மஞ்சு வாரியர், கனிகா, மம்தா மோகன்தாஸ் ஆகியோரெல்லாம் தொடர்ந்து கதாநாயகிகளாக நடிக்க முடிகிறது. அந்தவகையில் நடிகை பத்மபிரியாவையும் மலையாள திரையும் ஒதுக்கிவிட தயாராக இல்லை..
கடந்த வருடம் ஆந்தாலஜி படமாக வெளியான கிராஸ்ரோடு படத்தில் நடித்திருந்த பத்மபிரியா, அதைத்தொடர்ந்து மலையாள இயக்குனர் ராஜாகிருஷ்ணன் இயக்கிய இந்திப்படத்தில் சயீப் அலிகான் ஜோடியாக நடித்திருந்தார். இந்தநிலையில் பி.பத்மகுமார் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லராக உருவாகும் ஜோசப் எண்ட் ஆப் தி டே என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.