வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோர் மீது பாலியல் குற்றசாட்டுகளை தொடர்ந்து கூறிவருகிறார். இந்த நிலையில் அவர் தெலுங்கு சினிமாவில் பாலியல் குற்றங்கள் என்ற தலைப்பில் ஐதராபாத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தெலுங்கு இயக்குனார்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் நடிகையை படுக்கைக்கு அழைக்கிறவர்கள்தான். அவர்களின் பாலியல் தொல்லைகளை நடிகைகள் வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். தங்கள் வாய்ப்பு பறிக்கப்படும் என்று நினைக்கிறார்கள். எதிர்காலம் பாதிக்கும் என்று பயப்படுகிறார்கள். இந்த பயமே இயக்குனர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சினிமாவில் ஒரு நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கும்போதே அவர் தன் படுக்கையை பகிர்ந்து கொள்வாரா என்றுதான் பார்க்கிறார்கள்.
பாலியல் தொல்லை மட்டுமல்ல சம்பளத்திலும் நடிகைகளிடம் பாரபட்சம் காட்டுகிறார்கள். நடிகர்களுக்கு 10 கோடி சம்பளம் கொடத்தால், நடிகைக்கு ஒரு கோடி கொடுக்க தயங்குகிறார்கள். இந்த வேற்றுமை களையப்பட வேண்டும். நடிகைகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். பாலியல் குற்றம் புரிகிறவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். என்றார் ஸ்ரீரெட்டி.