ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்குத் திரையுலகத்தில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி' வெளிவந்து வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே தன்னுடைய அப்பா என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்றை 'என்டிஆர்' என்ற பெயரில் ஆரம்பித்தார் பாலகிருஷ்ணா.
அப்படத்தின் இயக்குனராக தேஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பும் ஆரம்பமானது. அதன்பின் இயக்குனர் தேஜாவுக்கும், பாலகிருஷ்ணாவுக்கும் இடையே சண்டை ஏற்பட தேஜா படத்திலிருந்து விலகினார். பின்னர் பாலகிருஷ்ணாவே படத்தை இயக்க முடிவு செய்தார்.
ஆனால், சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி' வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. படத்தில் பல அம்சங்களை அந்தக் காலத்திற்கேற்ப பொருத்தமாக படமாக்கியிருந்தார்கள். எனவே, 'என்டிஆர்' படத்தையும் அப்படி ஒரு தரமான படமாக எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் பாலகிருஷ்ணாவுக்கு ஏற்பட்டது. எனவே, படத்தின் இயக்குனராக கிரிஷ்-ஐ ஒப்பந்தம் செய்தார். இவர் பாலகிருஷ்ணா நடித்த 'கௌதமிபுத்ர சட்டகர்ணி' படத்தை இயக்கியவர்.
அடுத்து படத்தின் நாயகியாக நடிக்க நீண்ட நாட்களாகக் கேட்டு வந்த ஹிந்தி நடிகையான வித்யாபாலனும் தற்போது நடிக்க சம்மதித்துவிட்டாராம். என்டிஆர் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடிக்க உள்ளார். படத்தை ஜுன் மாதக் கடைசியில் மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறார்கள். ஜுலை மாதம் முதல் வித்யாபாலன் கலந்து கொள்வாராம்.