அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சில வருடங்களுக்கு முன், அதாவது மலையாள நடிகர் பஹத் பாசில், தான் முன்னணி நடிகராக மாறுவதற்கு முன், கதாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் என்பவர் சொன்ன கதையில் ஹீரோவே இல்லாமல் படம் முழுக்க வில்லன் ஆதிக்கம் செய்யும் கேரக்டரை கேட்டு அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதுதான் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய '22 பீமேல் கோட்டயம்' படம்.
அதை தொடர்ந்து இதே கதாசிரியரின் கைவண்ணத்தில் உருவான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் சூப்பர்ஹிட் வெற்றி சமீப வருடங்களாக சரிந்து கிடந்த பஹத் பாசிலின் மார்க்கெட்டை மீண்டும் தூக்கி நிறுத்தியது. அதை தொடர்ந்து இதே ஷ்யாம் புஷ்கரன் கதை எழுதியுள்ள 'கும்பளாங்கி நைட்ஸ்' படத்தில் இளம் ஹீரோக்கள் தவிர வலுவான வில்லன் வேடம் ஒன்று இருந்தது..
பேச்சுவாக்கில் அந்த கேரக்டர் பற்றி சொன்னதும் வாய்ப்பை நழுவ விடாத பஹத் பாசில் தானாகவே அந்த வில்லன் கதாபாத்திரத்தை கேட்டு வங்கிக் கொண்டாராம். படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் மது.சி.நாராயணனுக்கு இப்போதே படம் வெற்றி பெற்ற திருப்தி ஏற்பட்டு விட்டதாம்.