இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
மலையாள நடிகர் ஜெயசூர்யாவின் மனைவி சரிதா. இவர், தனது கணவர் நடிக்கும் படங்களில் காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்ல ஆடை வடிவமைப்பு ஸ்டுடியோ ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.
கடந்த ஆண்டு 'ஜெயசூர்யா நடித்த 'ஆடு-2' படத்தில் இரண்டு பக்கமும் பயன்படுத்தும் வடிவிலான கருப்பு - சிவப்பு வேட்டியை ஜெயசூர்யவுக்காக உருவாக்கினார் சரிதா. அந்த வேட்டி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது.
தற்போது, 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் திருங்கையாக நடித்துள்ள ஜெயசூர்யா, பெரும்பாலான காட்சிகளில் சேலைகட்டித்தான் நடித்துள்ளாராம். இதிலும் அவரது மனைவி சரிதா தான் படம் முழுக்க இவருக்கு சேலை கட்டிவிட்டுள்ளாராம்.
இதில் புத்திசாலித்தனமாக தனது கணவர் சேலை அணிந்து காட்சியளிக்கும் புகைப்படங்களை விளம்பர ஹோர்டிங்குகளாக மாற்றி, நகரத்தின் முக்கிய பகுதிகளில் வைத்து தனது புடவை கலெக்சனுக்கு விளம்பரம் தேடி வருகிறார் சரிதா.