ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் ஜெயராமின் மகனாக வாரிசு நடிகராக களம் இறங்கினாலும் கடந்த மூன்று வருடங்களில் காளிதாஸ் ஜெயராமல் இன்னும் ஒரு நல்ல அறிமுகத்தையே பெற முடியவில்லை.. தமிழில் அவர் அறிமுகப்படமாக நடித்த 'ஒருபக்க கதை' படத்தின் ரிலீஸ் எப்போது என்பது இன்னும், கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இந்தநிலையில் காளிதாஸுக்கு நல்ல நேரம் பிறந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.. ஆம் சில நாட்களுக்கு முன்புதான் அல்போன்ஸ் புத்ரன் தமிழில் இயக்கவுள்ள புதிய படத்தில் காளிதாஸ் ஹீரோவாக நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானது. இப்போது இன்னும் ஒருபடி மேலான சந்தோஷமாக, பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் காளிதாஸ். இதை தனது முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் காளிதாஸ்.
கடந்த ஜனவரியில் மோகன்லால் மகன் பிரணவை வைத்து ஆதி என்கிற நூறு நாள் படத்தை கொடுத்த ஜீத்து ஜோசப் தற்போது இந்தியில் இம்ரான் ஹாஸ்மியை வைத்து படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். காளிதாஸும் அல்போன்ஸ் புத்ரன் படத்தை முடித்ததும் இந்த வருட இறுதியில் ஜீத்து ஜோசப் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.