ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் அனுஷ்கா 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் புகழ் பெற்ற நடிகையாக மாறிவிட்டார். 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அனுஷ்கா நடித்து வெளிவந்த 'பாகமதி' படமும் தெலுங்கில் நல்ல வசூலைக் கொடுத்து வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அனுஷ்கா புதிய படங்கள் எவற்றிலும் இதுவரை ஒப்பந்தம் ஆகவில்லை. அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தாலும் இன்னும் எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறார் என்கிறார்கள்.
ஒரு பக்கம் அவரது குடும்பத்தார் அவருக்குத் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. 13 வருடங்களாக தமிழ், தெலுங்கில் பல முக்கியமான படங்களில் நடித்துள்ளவர் அனுஷ்கா. தற்போது ஆன்மீக சுற்றுப் பயணம் சென்றுள்ளார். கேதார்நாத் கோவிலுக்கு அவர் சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த சுற்றுப் பயணம் குறித்து அனுஷ்கா அவருடைய பேஸ்புக்கில் எதையும் பகிரவில்லை. ருத்திராட்ச மாலை அணிந்து, நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் ஆகியவற்றுடன் அடையாளம் தெரியாத அளவிற்கு பக்தையாக மாறியிருக்கிறார் அனுஷ்கா.
காதலருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்லும் நடிகைகளுக்கு மத்தியில் ஆன்மீக சுற்றுப் பயணம் செல்லும் அனுஷ்கா உண்மையிலேயே வித்தியாசமானவர்தான்.