அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு கேரளாவில் ரசிகர்களிடம் எத்தகைய செல்வாக்கு இருந்தது என கடந்த ஆகஸ்ட் மாதம் நிரூபணமானது. கொச்சியில் முக்கியமான சாலையான எம்.ஜி.ரோட்டில் அமைந்துள்ள செல்போன் ஷோரூமை திறந்து வைக்க வந்திருந்த சன்னி லியோனைக்காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர்.
கேரளா ரசிகர்கள் தன் மீது காட்டிய அன்பை கண்டு திகைத்து போன சன்னி லியோன் மீண்டும் கேரளாவுக்கு விரைவில் வருவேன் என சொல்லிவிட்டு போனார். அவர் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அப்படி சொல்லியிருந்தாலும் தற்போது உண்மையிலேயே கேரளாவுக்கு வருகை தர இருக்கிறார் சன்னி லியோன்.
வரும் மே-26-ஆம் தேதி கேரளாவில் நடைபெற்ற டான்ஸ் மாரத்தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாட இருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் தொடர் நடனமாக நடைபெறும் இந்த நிகழ்சியில் சன்னி லியோன், நடிகை பூர்ணா, பிரேமம் புகழ் பாரிஸ் லட்சுமி உட்பட 25௦ நடன கலைஞர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்களாம்.