பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் மகேஷிண்டே பிரதிகாரம், தமிழில் '8 தோட்டாக்கள்' படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அபர்ணா பாலமுரளி. தற்போது 'காமுகி' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பார்வை சவால் கொண்ட கதாநாயகனுக்கும் அவனை விரட்டி விரட்டி காதலிக்கும் இளமங்கைக்குமான காதல் தான் இந்த காமுகி படம்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக 'இதிகாசா' என்கிற படத்தை இயக்கிய பினு என்பவர்தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் தயாரிப்பதற்கு எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லையாம். அதுபோல இதில் நடிப்பதற்கு சில ஹீரோக்களும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிப்போனார்களாம்.
இதுகுறித்து கூறியுள்ள அபர்ணா பாலமுரளி, “மலையாள சினிமாவில் பெண்களை மையப்படுத்திய கதைகள் என்றால் பாரபட்சம் காட்டுவது இப்போதும் கூட தொடர்கிறது.. மிகுந்த வலி, போராட்டங்களுடன் தான் இந்தப்படத்தை முடித்தோம்” என தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.