'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரைப்பட இயக்குனர் நாதிர்ஷா. ஏற்கனவே மலையாளத்தில் இரண்டு ஹிட் படங்களை இயக்கிய இவர், தற்போது முதன்முறையாக தமிழில் 'அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை' என்கிற படத்தை இயக்கிவருகிறார். இந்தப்படத்தை தனுஷ் தயாரிக்க, தனியார் தொலைக்காட்சியில் 'பிராங்க் கால்' மூலம் பிரபலங்கள் பலரையும் கலாய்க்கும் தீனா என்பவர் தான் இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இந்தப்படம் மலையாளத்தில் கடந்த 2௦16ல் புதுமுகங்கள் நடிப்பில் இதே நாதிர்ஷா இயக்கிய 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' என்கிற படத்தின் ரீமேக்காகத் தான் உருவாகி வருகிறது. இந்தப்படத்தை முடிந்ததும் அடுத்ததாக தனது நண்பரான திலீப் படத்தையோ, அல்லது மம்முட்டி நடிக்கும் படத்தையோ இயக்குவார் என சொல்லப்பட்டு வந்தது..
ஆனால் அவர் அடுத்து இயக்கப்போவது பிஜூமேனன் படத்தைத்தானாம். இந்த தகவலை, இந்த புதிய படத்திற்கு கதை எழுதுபவரும், சமீபத்தில் தேசிய விருதுபெற்ற கதாசிரியருமான சஜீவ் பழூர் என்பவர் தெரிவித்துள்ளார்.