மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழில் எப்படி அம்மா நடிகை என்றால் நம்பர் ஒன் இடத்தில் சரண்யா பொன்வண்ணன் இருக்கிறாரோ, அப்படி ஒரு இடத்தை மலையாள சினிமாவில் பிடிக்க பரபரவென பம்பரமாக சுழல்கிறார் சீனியர் நடிகை சாந்தி கிருஷ்ணா. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் தமிழில் 'பன்னீர் புஷ்பங்கள்' என்கிற படம் மூலமாக பிரபலமானவர் தான் சாந்தி கிருஷ்ணா.
பல ஆண்டுகளுக்கு முன்பு தனது திருமணத்திற்காக சினிமாவை இரண்டுமுறை உதறிய இவர், இப்போது மீண்டும் சினிமா தான் தனது வாழ்க்கை என முடிவெடுத்துள்ளார். 51 வயதான இவர், இப்போது மலையாள சினிமாவில் அம்மா, அக்கா வேடங்களை குறிவைத்துள்ளார். அந்தவகையில் இவருக்கு நிவின்பாலியின் நடிக்கும் 'ஞண்டுகளுட நாட்டில் ஓரிடவேள' என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது
அதில், அவரது நடிப்பிற்கு வரவேற்பு கிடைக்கவே, சமீபத்தில் வெளியான 'குட்டநாடன் மர்பாப்பா' படத்தில் குஞ்சாக்கோவின் அம்மாவாக நடித்திருந்தார். அடுத்தததாக வினீத் சீனிவாசனின் அம்மாவாக நடித்துள்ள 'அரவிந்தண்டே அதிதிகள்' என்கிற படம் வரும் ஏப்-27ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதுதவிர இன்னும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சாந்தி கிருஷ்ணா.