ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த பிப்ரவரி மாதம் மனதை உலுக்கிய சம்பவம் என்றால் கேரளாவில் அட்டப்பாடி பகுதியில் மது என்கிற ஆதிவாசி இளைஞரை அரிசி திருடியதாக கருதி சிலர் அடித்தே கொன்றார்களே, அதுவாகத்தான் இருக்கும். அனைவரையும் உலுக்கிய இந்த பரிதாப நிகழ்வு காலப்போக்கில் மறக்கப்பட்டு வருகிறது..
இந்தநிலையில் நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில், தனது மஞ்சு வாரியார் நற்பணி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சித்திரை விஷு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அட்டப்பாடி பகுதிக்கு சென்றிருந்தார். அந்த பகுதி மக்களுக்கு தன் கையால் அருமையான விருந்தும் பரிமாறி அவர்களை சந்தோஷப்படுத்தினார்.
மேலும் மதுவின் மரணத்தால் பாதிக்கப்பட்ட அவரது தாய் மல்லி மற்றும் மதுவின் சகோதரிகள் ஆகியோராய் சந்தித்து தனது ஆறுதலையும் கூறினார் மஞ்சு வாரியர். பாதிக்கப்பட்ட மக்களுடன் அவர்களது துக்கத்தில் பங்கெடுப்பதுடன், அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் விதமாகவே இதுபோன்ற கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாராம் மஞ்சு வாரியர்.