'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமந்தாவின் கேரியரில் ரங்கஸ்தலம் முக்கியமான படமாகி விட்டது. காரணம், அவர் திருமணத்திற்கு பிறகு நடித்த இந்த படம் ரூ. 150 கோடி வசூலை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால், சமந்தாவின் சினிமா பயணத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், ரங்கஸ்தலம் படத்தின் வெற்றிவிழா ஐதராபாத்தில் நடந்தபோது உற்சாகமாக கலந்து கொண்டார் சமந்தா. விழாவில், மேடையில் பேசியவர்கள் சமந்தாவின் நடிப்பு குறித்து பெருமையாக பேசினர். அப்போது அவர்களைப்பார்த்து தனது இருக்கையில் அமர்ந்தபடியே இரண்டு கைகளையும் உயர்த்தி நமஸ்காரம் செய்து நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.
அதன்பிறகு தான் மேடையேறியபோதும் பெரிதாக பேசாமல், என்னைப்பற்றி எல்லோருமே பேசிவிட்டார்கள். நான் பேச ஒன்றுமே இல்லை என்று வெறும் நன்றி மட்டும் சொல்லிவிட்டு இறங்கிவிட்டாராம் சமந்தா.