நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
இடைவெளியில்லாமல் படங்களில் நடித்துவரும் மோகன்லால், தற்போது தான் நடித்துவரும் 'ஒடியன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக நீராளி, காயங்குளம் கொச்சுன்னி ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார்.
இந்தநிலையில் தனது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் 'பிலாதிகதா' என்கிற படத்திலும் சின்னதாக ஒரு ரோலில் மோகன்லால் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. காரணம் மோகன்லாலின் நண்பரும் நடிகரும் தயாரிப்பாளருமான மணியம்பிள்ள ராஜூவின் மகன் நிரஞ்சன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்பதால் தான்.
ஆனால் முதலில் நட்புக்காக மோகன்லாலை ஒப்புக்கொள்ள வைத்த இயக்குனர் ரஞ்சித், போகப்போக மோகன்லால் கேரக்டரை நீண்ட நேரம் வரும்படி மாற்றியமைத்து விட்டாராம். இதை தொடர்ந்து இந்தப்படத்திற்காக மே-1௦ முதல் ஜூன்-25 வரை மொத்தம் 45 நாட்கள் கால்ஷீட் வழங்கியுள்ளாராம் மோகன்லால்.