ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆந்திரா, தெலுங்கானாவில் இப்போது பரபரப்பான நடிகை ஸ்ரீரெட்டி. தனது பேஸ்புக்கில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் அந்தரங்க ஆபாச படங்களை ரெட்டிலீக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார். பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று பரபரப்பு குற்றம் சாட்டினார். சில இயக்குனர்கள், நடிகர்களின் பெயரையும் சொன்னார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென தெலுங்கு பிலிம் சேம்பர் முன் ஆடைகளை களைந்து அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். தன்னை தெலுங்கு நடிகர் சங்கத்தில் சேர்க்க மறுக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த அரை நிர்வாண போராட்டத்திற்காக ஸ்ரீரெட்டியை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ரீரெட்டியை நடிகர் சங்க உறுப்பிராக்க முடியாது என்று நடிகர் சங்கத் தலைவர் சிவாஜிராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: பொது இடத்தில் ஆடைகளை கழைந்து அரை நிர்வாணமாக நிற்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. இந்த தவறான செய்கைகள் மூலம் இலவச விளம்பரம் தேட முயற்சிக்கிறார். அவரை சங்கத்தின் உறுப்பினராக்குவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். என்றார்.