தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலத்தில் முன்னணி ஹீரோ, முன்னணி டைரக்டர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் தமன்னாவின் ஆசையாக இருந்து வந்தது. ஆனால், பாகுபலி உள்ளிட்ட சில படங்களில் நடித்த பிறகு சிறந்த டெக்னீசியன்கள் இடம்பெறும் படங்களில் நடிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக தெரிவித்து வந்தார் தமன்னா.
இந்நிலையில், தற்போது தெலுங்கில் கல்யாண் ராம் நடிக்கும் நா நுவ்வே என்ற படத்தில் நாயகியாக கமிட்டாகியிருக்கிறார் தமன்னா. இந்த படத்தில் நடிக்க முதலில் கால்சீட் கேட்டபோது சம்பள பிரச்சினை காரணமாக தட்டிக் கழித்து வந்த தமன்னா, அப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதை அறிந்ததும் உடனே ஒப்பந்தமாகி விட்டார்.
அதோடு நேற்று முதல் அப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தமன்னா, பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசைகளில் ஒன்றாக இருந்து வந்தது. அது இன்றைக்கு நிறைவேறியுள்ளது. அவரது ஒளிப்பதிவில் நடித்தது பெருமையாகவும், கெளரவமாகவும் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.