நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
பஹத் பாசில் கதாநாயகனாக நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான படம் 'தொண்டிமுதலும் த்ரிக்சாட்சியும்'. இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நிமிஷா சஜயன். இந்தப்படத்திற்கு முன்பே மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்த 'கேர் ஆப் சாயிராபானு' என்கிற படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் அவருடன் நட்பை தொடர்ந்து வருகிறார் நிமிஷா.
இந்தநிலையில் மோகன்லால் மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் 'ஒடியன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்ட நிமிஷா சஜயன், மஞ்சு வாரியரிடம் மோகன்லாலை சந்திக்க வேண்டும் என்கிற தனது நீண்டநாள் ஆசையை வெளிப்படுத்தினார். காரணம் நிமிஷா மோகன்லாலின் தீவிர ரசிகையாம்.
மஞ்சு வாரியரும் நிமிஷாவை வரவழைத்து மோகன்லாலுடன் சந்திக்க வைத்துள்ளார். கதாநாயகியாக தற்போது இரண்டு படங்களில் நடித்துவரும் நிமிஷா, மோகன்லால் முன் ஒரு ரசிகையாக மாறிப்போய் விட்டாராம். “அந்த தருணத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை” என்கிறார் சிலாகிப்புடன்.