பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தற்போது அறிமுக இயக்குனரான சரத் சந்தித் டைரக்சனில் மலையாளத்தில் 'பரோல்' என்கிற படத்தில் நடித்துள்ளார் மம்முட்டி. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் மம்முட்டி சிறைக்கைதியாக நடிக்கிறார். மம்முட்டியின் மனைவியாக இனியா நடிக்க, தங்கையாக மியா ஜார்ஜ் நடிக்கிறார். இந்தப்படம் நாளை மறுநாள் (மார்ச்-31)ஆம் தேதி ரிலீஸாகிறது..
இதையடுத்து தனது அடுத்த படத்தையும் மம்முட்டியை வைத்தே இயக்கவுள்ளார் இயக்குனர் சரத் சந்தித்.. அதுவும் இந்த தகவலை அவர் எப்படி அறிவித்துள்ளார் தெரியுமா..? “எனது அடுத்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார்” என டுவிட்டரில் பதிவிட்டதன் மூலம், அடுத்ததாக மம்முட்டி படத்தை இயக்க இருப்பதையும் அதில் எப்படியானாலும் அனுஷ்காவை கதாநாயகியாக நடிக்க வைக்க இருப்பதையும் உறுதிபட கூறியுள்ளார் சரத் சந்தித்.