தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராம்கோபால் வர்மா தற்போது நாகார்ஜுனா நடித்துவரும் 'ஆபீசர்' என்கிற படத்தை இயக்கிவருகிறார். ராம்கோபால் வர்மா இயக்குனராக அறிமுகமான 'உதயம்' படத்தை நாகார்ஜூனா தயாரித்தார். 25 வருடம் கழித்து தனது இயக்கத்தில் நாகார்ஜூனா நடிக்கும் ஆபீசர் படத்தை முதன்முதலாக தயாரித்து இருக்கிறார் வர்மா.
இந்தப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்ததாக நாகர்ஜூனாவின் மகன் அகில் நடிக்கும் படத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார் வர்மா. இந்தப்படம் அவரது வழக்கமான பாணியில் ஆக்சன், வயலன்ஸ் கலந்த காதல் கதையாக உருவாக இருக்கிறதாம்.
இந்த தகவலை வெளியிட்டுள்ள ராம்கோபால் வர்மா, மேலும் உதயம் படத்தில் பார்த்த நாகார்ஜுனாவை விட அகிலிடம் இன்னும் ஸ்பெஷலாக ஏதோ இருக்கிறது என கூறி நாகர்ஜுனாவிடம் ஐஸ் மழை பொழிந்துள்ளார்.
நேற்று முன்தினம் தான் 'தொல்லி பிரேமா' இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்சனில் அகிலின் மூன்றாவது படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவரது நான்காவது படத்தை தான் இயக்கப்போவதாக ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார் என்பதும், ஆனால் இதுகுறித்து நாகார்ஜூனா தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.