ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் சுரேஷ்கோபி, பார்த்திபன் இருவரையும் வைத்து 'மேல்விலாசம்' என்கிற படத்தை எடுத்து சாதனை படைத்தவர் தான் இயக்குனர் மாதவ் ராமதாசன்.. என்ன சாதனை என்றால் வெறும் பத்து, பதினைந்து கேரக்டர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரே ஒரு கோர்ட் ஹாலில் மொத்தப்படமும் ஒரு விசாரணை (கோர்ட் மார்ஷியல்) வடிவில் நகர்வதாக படமாக்கி இருந்தார் மாதவ் ராமநாதன்.
அதை தொடர்ந்து சுரேஷ்கோபி, ஜெயசூர்யா இருவரையும் வைத்து மருத்துவமனை முறைகேடுகளை மையப்படுத்தி 'அப்போதேகேறி' என்கிற படத்தை இயக்கினார். அடுத்தததாக இப்போது 'இளையராஜா' என்கிற படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை டைட்டில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார் மாதவ் ராமநாதன்
சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்தப்படம் ஏப்ரலில் துவங்க இருக்கிறது.