ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் |
ஒருகட்டத்திற்கு மேல் ஹீரோவாகவே தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் அவ்வப்போது கேரக்டர் ரோல்களில் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டார் நடிகர் ஜெயராம். சமீபத்தில் வெளியான பாகமதி படத்தில் கூட வில்லனாக நடித்திருந்தார். ஆனால் இதையெல்லாம் தாண்டி இன்னும் வித்தியாச வேடங்களில் தனது திறமையை வெளிப்படுத்த விரும்புகிறார் ஜெயராம்.
அப்படி ஒரு படமாக அவரை தேடிவந்த படம் தான் மலையாளத்தில் தற்போது உருவாகிவரும் பஞ்சவர்ண தாதா. ஜெயராம், குஞ்சாக்கோ போபன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இதில் ஜெயராம் பறவைகளை விற்பனை செய்யும் கடை நடத்துபவராக நடித்துள்ளார். அதிலும் வித்தியாசமாக, மொட்டைத்தலை கெட்டப்பில் நடித்துள்ளார்.
“இந்தப்படத்திற்குப்பின் என்னைப்பற்றிய படைப்பாளிகளின் கண்ணோட்டம் வேறுவிதமாக மாறும்.. சினிமாவில் எனது பாதையும் மாறும்” என்கிறார் ஜெயராம்.
கேரளாவில் டிவி சேனல் தொகுப்பாளர்களில் ரொம்பவே பாப்புலரான ரமேஷ் பிஷரோடி என்பவர் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் டைரக்சன் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார்.