ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை அமலாபால், அவரை தொடர்ந்து நடிகர் பஹத் பாசில், நடிகரும் எம்.பியுமான சுரேஷ்கோபி உள்ளிட்ட பலர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த தங்களது சொகுசு கார்களை கேரளாவில் பதிவு செய்யாமல் புதுச்சேரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு மோசடி செய்த விஷயம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில் நடிகை அமலாபால், பஹத் பாசில் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் தான், இத்தாலியில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பில், தான் புதிதாக இறக்குமதி செய்துள்ள ஸ்போர்ட்ஸ் மாடல் லம்பார்க்கினி காரை கேரளாவிலேயே பதிவு செய்து அசத்தியுள்ளார் நடிகர் பிருத்விராஜ்.
இதை கேரளாவில் பதிவு செய்வதற்காக சுமார் 43.16 லட்ச ரூபாயை வரியாக செலுத்தியுள்ளார் பிருத்விராஜ். கேரளாவின் காக்கநாடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.