தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மோகன்லாலின் மகன் பிரணவ் தனது முதல் படமான 'ஆதி' மூலம் தான் ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான அனைத்து லட்சணங்களும் கொண்டவர் என நிரூபித்துவிட்டார். ஆனால் அந்தப்படத்தில் மருந்துக்கு கூட காதல் காட்சி எதுவும் இடம்பெறவே இல்லை..
அதேபோல பிரணவின் இரண்டாவது படத்தை இயக்குகிறார் திலீப் நடித்த ராம்லீலா படத்தை இயக்கிய அருண்கோபி.. ராம்லீலா இவரது முதல் படம் என்றாலும், இதிலும் காதல் காட்சிகள் எதுவும் இல்லாமல், முழுக்க அரசியல் களத்திலேயே கதை நகர்த்தி வெற்றி பெற்றிருந்தார்.
தற்போது பிரணவும், அருண் கோபியும் தங்களது இரண்டாவது படத்தில் அருமையான காதல் கதைக்காக இணைந்துள்ளார்கள். ஒரு இயக்குனராக அருண்கோபியும், ஒரு ஹீரோவாக பிரணவ் மோகன்லாலும் தங்களை ரொமான்ட்டிக் ஏரியாவிலும் நிரூபிப்பார்கள் என நம்பலாம்.