இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இதுவரை மசாலா படங்களில்தான் அதிகமாக நடித்து வந்துள்ளார் காஜல்அகர்வால். பெரும்பாலும் அவரை டூயட் பாடல்களுக்கு மட்டுமே இயக்குனர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இருப்பினும் அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்று வருவதால் படத்திற்குப் படம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே வருகிறார் காஜல்அகர்வால்.
மேலும், இதுவரை இளவட்ட நடிகர்களுடன் டூயட் பாடுவதற்கு தான் சம்பளத்தை அதிகப்படியாக கேட்டு வந்த காஜல், தற்போது தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் அமர் அக்பர் ஆண்டனி படத்தில் நடிக்க முதலில் ஒத்துக்கொண்ட அவர், தான் கேட்ட சம்பளம் தரப்படவில்லை என்பதால் பின்னர் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார். அதனால் இப்போது காஜல்அகர்வால் வேடத்துக்கு அனு இம்மானுவேல் கமிட்டாகியிருக்கிறார்.
இதையடுத்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் சம்பளத்தை விட்டுக்கொடுக்கலாம். ஆனால் இது வழக்கமான மசாலாப்படம். இந்த மாதிரி படங்களுக்காக சம்பளத்தை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று அப்படக்குழுவிடம் வாக்குவாதம் செய்துள்ளார் காஜல்அகர்வால்.