ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் பிருத்விராஜ், இன்று(மார்ச் 9) 'பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுனத்தை துவங்கியுள்ளார். இதற்குமுன் சில ஆண்டுகளாக ஆகஸ்ட் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருந்து படங்களை தயாரித்த பிருத்விராஜ், கடந்த ஆண்டு அந்த நிறுவனத்தில் இருந்து விலகிக்கொண்டார்.
சுமார் ஒரு ஆண்டு ஆன நிலையில் இந்த புதிய நிறுவனத்தை ஆரம்பித்துள்ள பிருத்விராஜ், சினிமாவில் இருந்து பெற்றதை சினிமாவுக்கும் வழங்க வேண்டும் என்கிற குறிக்கோளில் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளாராம்.
அதுமட்டுமல்ல, தன்னை தயாரிப்பு நிறுவனத்தில் கைபிடித்து அழைத்து அனுபவங்களை கற்றுக் கொடுத்த, ஆகஸ்ட் சினிமாஸின் மற்ற பங்குதாரர்களான சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன் ஆகியோருக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுடன் தனக்கு எந்த பிணக்கும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார் பிருத்விராஜ்.
இதன் முதல் தயாரிப்பு குறித்த மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார் பிருத்விராஜ்.