ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அறிமுகமான முதல் படமான 'ஆதி' மூலம் சக்சஸ் ஹீரோ என்கிற அடையாளத்தை பெற்றுவிட்டார் மோகன்லாலின் மகன் பிரணவ். அந்த விதமாக மோகன்லாலுக்கு தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி காட்டிவிட்டார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
முதல் படத்தில் வெற்றியை ருசித்த பல அறிமுக ஹீரோக்கள், இரண்டாவது படத்திலேயே சறுக்கிய நிகழ்வுகள் ஏராளம். அதனால் தனது இரண்டாவது படத்திற்கான கதை தேர்வில் கவனம் செலுத்தி வந்தார் பிரணவ். இந்நிலையில் கடந்த ஆண்டு திலீப்பை வைத்து 'ராம்லீலா' என்கிற பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்த அருண் கோபி டைரக்சனில் நடிக்கிறார்.
ராம்லீலா படத்தை மட்டுமல்ல, மோகன்லாலை வைத்து மலையாள சினிமாவின் நம்பர் ஒன் வசூல் படமான 'புலி முருகன்' படத்தை தயாரித்த தோமிச்சன் முலகுப்பாடம் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.