பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமாவில் படங்களை திரையுடுவதில் முக்கிய பங்கு வகிக்கும் க்யூப் மற்றும் யு எப் ஓ உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் மார்ச்-1 முதல் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகங்களும் சேர்ந்து வேலைநிறுத்தத்தை துவங்க உள்ளன.
இதனால் மார்ச்-1 முதல் புதிய படங்கள் எதுவும் வெளியாக வாய்ப்பில்லை. அதேசமயம் மலையாள திரையுலகம் மட்டும் இதிலிருந்து சற்றே விலகி, மார்ச்-1ஆம் தேதி மட்டும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது. ஆனால் வழக்கம்போல மார்ச்-2, 9 ஆகிய தேதிகளில் ஏற்கனவே திட்டமிட்டுள்ள படங்கள் ரிலீஸாக இருக்கின்றன.
இந்த முடிவால் ஜெயராமின் மகன் காளிதாஸ் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். மலையாளத்தில் அவர் அறிமுகமாகி நடித்துள்ள 'பூமரம்' படம் இரண்டு வருடங்களாக பல சிரமங்களை கடந்து வரும் மார்ச்-9ஆம் தேதி தான் ரிலீஸாக இருக்கிறது.
மலையாள திரையுலகம் ஒரு நாள் மட்டுமே அடையாள வேலைநிறுத்தம் செய்வதால் தனது படம் திட்டமிட்டபடி வெளியாகிவிடும் என மகிழ்ச்சியில் இருக்கிறாராம் காளிதாஸ் ஜெயராம்.