டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கில் மகேஷ்பாபு நடித்துள்ள புதிய படம் பாரத் அனே நேனு. இந்த படத்தை ஏப்ரல் 26-ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். அதேபோல் அல்லு அர்ஜூன் நடித்துள்ள படம் நா பேரு சூர்யா. இந்த படத்தையும் ஏப்ரல் 26-ந்தேதியே வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதால், மகேஷ்பாபு படத்தை ஒரு வாரத்திற்கு முன்போ அல்லது அல்லு அர்ஜூன் படத்தை ஒரு வாரத்திற்கு பிறகோ வெளியிடுமாறு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் என்ற இரண்டு நடிகர்களின் படங்களுமே ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுப்பதாக இல்லையாம். வேண்டுமானால் அவர்கள் படத்தை வேறு தேதியில் வெளியிட சொல்லுங்கள் என்று இரண்டு படக்குழுவினருமே விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார்களாம்.
இருப்பினும், ஏதேனும் ஒரு படத்தை ஏப்ரல் 26-ந்தேதி வெளியிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் முயற்சியை தொடர்ந்து வருகிறார்கள்.