தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்தப்படத்தை ஹிந்தி ரசிகர்களையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ப உருவாக்கி வருகிறார்கள்.
அதனால், தான் சாஹோ படத்தில் ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ் உள்பட ஐந்து பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஆனால் இந்த நட்சத்திரங்களால் படக்குழுவினருக்கு அவ்வப்போது சங்கடங்கள் ஏற்பட்டு வருகின்றனவாம்.
குறிப்பாக இவர்களில் சிலர் படம் குறித்த விஷயங்களை மூடி மறைக்காமல் வெளியே பரவ விடுகின்றனாராம். படத்தின் நாயகியான ஸ்ரத்தா கபூர், தான் இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதுடன், பிரபாஸும் சக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என முக்கிய தகவலை சமீபத்தில் தான் போட்டுடைத்திருந்தார்.
நடிகர் நீல் நிதின் முகேஷும் இது வழக்கமான மசாலா படம் அல்ல, த்ரில்லர் அம்சங்கள் கொண்ட படம் என வெளிப்படையாக கூறி வருகிறார். இப்படி தகவல்கள் லீக்காவது படக்குழுவினருக்கு சங்கடம் தந்தாலும், பிரபாஸின் ரசிகர்கள் இதனால் குஷியாகியுள்ளார்கள் என்பதும் உண்மை.