வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
சமீபத்தில் வெளியான சவரக்கத்தி மூலம் தனது நடிப்பால் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த நடிகை பூர்ணா, அடுத்தததாக மலையாளத்தில் 'ஒரு குட்டநாடன் பிளாக்' என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் ஏற்கனவே ராய் லட்சுமி, அனு சித்தாரா என இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள்.
இதில் பூர்ணாவின் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் வித்தியாசமானது என்கிறார் இயக்குனர் சேது. ஆண் போலீஸ் அதிகாரிகளை மட்டுமே பார்த்து வந்த ஒரு கிராமத்து போலீஸ் ஸ்டேஷனில், முதல் பெண் போலீஸ் அதிகாரியாக பூர்ணா என்ட்ரி கொடுக்க, அதை தொடர்ந்து நடக்கும் கலாட்டாக்கள் காமெடியாக நகருமாம்.
தான் நடித்த 'மிலி' படத்தில் தனக்கு சிறிய கேரக்டர் கொடுத்து இயக்குனர் ராஜேஷ் பிள்ளை அப்போது ஏமாற்றிவிட்டதாக புலம்பிய பூர்ணா, சுமார் நான்கு வருடங்களுக்கு பின் மீண்டும் இந்தப்படம் மூலம் மலையாளத்தில் மீண்டும் அடியெடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..