தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல மலையாள நடிகை சனுஜா. தமிழில் ரேணிகுண்டா, நாளை நமமே, பீமா உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்ணூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தபோது அதே ரெயிலில் ஒரே பெட்டியில் பயணித்த குமரி மாவட்டம் வில்லுக்குறிச்சியை சேர்ந்த ஆண்டோ போஸ் என்பவர் சனுஜாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
அவரிடமிருந்து தப்பிய சனுஜா சக பயணிகள் உதவியுடன் அவரை பிடித்து ரெயில்வே போலீசிடம் ஒப்படைத்தார். ரெயில்வே போலீசார் ஆண்டோ போஸை கைது செய்தனர். அவர் மீது திருச்சூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க நடிகை சனுஜாவுக்கு கோர்ட் சம்மன் அனுப்பி இருந்தது. இதைத் தொடர்ந்து சனுஜா நேற்று தனது தந்தையுடன் திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீமன்றத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு சனுஜா நீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றார். சனுஜா நீதிமன்றம் வந்ததை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.