டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் படம் எடுத்தாலும் பரபரப்புதான், பேசினாலும் பரபரப்புதான். அவர் தற்போது காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் என்ற ஒரு படம் இயக்கி தயாரித்தார். இந்தப் படத்தில் பிரபல நீலப்பட நடிகை மியா மல்கோவா நடித்துள்ளார். இந்தப் படத்தை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.
இந்தப் படம் பெண்களை இழிவுபடுத்துவதாக கூறி தெலுங்கானா மாநிலத்தில் பல பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த படம் குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராம்கோபால் வர்மா பெண்களுக்கு எதிரான சில கருத்துக்களை கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெண்களின் போராட்டம் இன்னும் வலுவடைந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 40 காவல் நிலையங்களில் ராம்கோபால் வர்மா மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ராம்கோபால் வர்மா மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ராம்கோபால் வர்மா போலீஸ் முன்பு ஆஜராகி தனது விளக்கத்தை தரவேண்டும் என்று அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று ஐதராபாத் சென்டிரல் க்ரைம் போலீசார் முன்பு ராம்கோபால் வர்மா ஆஜரானார். அவரிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடமிருந்த மொபைல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மீண்டும் வருகிற திங்கட்கிழமை (நாளை) ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். நாளை விசாரணை முடிவுக்கு பிறகு ராம்கோபால் வர்மாக கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.