ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த சில நாட்களாக இணையதளம் மற்றும் சோஷியல் மீடியாக்களின் ஹாட் டாபிக்காக இருப்பது மலையாள சினிமா பாடலான 'மாணிக்ய மலராய பூவி' பாடலும் அதில் புருவங்களை உயர்த்தி இளைஞர்களின் மனதை கிறங்கடித்த ப்ரியா வாரியரும் தான். எந்தளவுக்கு இந்தப்பாடலுக்கு புகழ் கிடைத்ததோ அந்த அளவுக்கு இந்தப்பாடல் குறித்த சர்ச்சைகளும் கிளம்பின.
இருந்தாலும் இந்தபாடலுக்கு கருத்து சுதந்திரம் என்கிற அடிப்படையில் தனது ஆதரவை தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பிணராயி விஜயன். ஆனால் முதல்வரின் இந்த செயலுக்கு மலையாள நடிகரும் இயக்குனருமான ஜாய் தாமஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தில் படக்குழுவினரின் கருத்து சுதந்திரத்தை மதிக்கும் நீங்கள், சமீபத்தில் கேரளாவில் காங்கிரஸ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட விவகாரத்தில் வாய்மூடி இருப்பது ஏன்..? ஒருவேளை குற்றவாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கும் ஆதரவு தருகிறீர்களோ” என கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார் ஜாய் தாமஸ்.