ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இங்கே கமல், ரஜினி இருவருக்குமே அரசியலில் நுழைவதை அறிவிப்பதில் இருந்து, நிர்வாகிகளை சந்திப்பது, கட்சியின் பெயர்களை அறிவிப்பது என எல்லாவற்றிலும் போட்டி நிலவுவது போன்ற தோற்றம் உருவாகிவிட்டது. இதே ரீதியில் தான் மலையாள திரையுலகில் ஒரே விஷயத்திற்காக மம்முட்டியும் மோகன்லாலும் விடாப்பிடியாக போட்டி போடுகிறார்கள்.
கேரளாவில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'குஞ்சாலி மரைக்கார்' என்கிற கடற்படை தலைவன் பற்றிய கதையை, மம்முட்டியை வைத்து தயாரித்து இயக்குவதாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அறிவித்தார். அதற்கு முன்பே பிரியதர்ஷன் இயக்கத்தில் இதே கதையில் மோகன்லால் நடிப்பதாக பேச்சுவாக்கில் இருந்த விஷயம் பின்னர் அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் மம்முட்டியின் 'குஞ்சாலி மரைக்கார்' படத்தை வரும் ஜூலையில் ஆரம்பிக்க இருக்கிறாராம் சந்தோஷ் சிவன்.. ஆனால் அதற்கு முன்னதாகவே மோகன்லால் நடிக்கும் 'குஞ்சாலி மரைக்கார்' படத்தை துவங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம் பிரியதர்ஷன்.