ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண், தற்போது ஜனசேனா பார்ட்டி என்ற கட்சி தொடங்கியிருக்கிறார். அதோடு ஆந்திராவில் வரப்போகிற சட்டசபை தேர்தலில் தனது கட்சி சார்பில் தனித்து போட்டியிடவும் தயாராகி வருகிறார். ஆந்திராவில் அவர் பல பகுதிகளில் மக்கள் முன்பு தோன்றி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஹிந்துப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்து வரும் நடிகர் பாலகிருஷ்ணாவிடம், அடுத்த தேர்தலில் உங்கள் தொகுதியான அனந்தபூரில் போட்டியிட நடிகர் பவன்கல்யாண் தயாராகி வருகிறாரே. அது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
அதைக்கேட்டு கடும் கோபமடைந்த பாலகிருஷ்ணா, யார் அந்த பவன் கல்யாண். அப்படி யாரும் எனக்குத் தெரியாது என்று அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து வேகமாக சென்றுவிட்டாராம்.