600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஜெய்சிம்ஹா படத்தில் நடித்த பாலகிருஷ்ணா, அடுத்தபடியாக தனது தந்தையான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படத்தை தயாரித்து, நடிக்கிறார். இன்னும் சில மாதங்களில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த நிலையில், பாலகிருஷ்ணாவுக்கு கையில் ஆபரேசன் நடைபெற்றுள்ளது.
தனது 100வது படமான கவுதமிபுத்ர சட்டகர்னி படத்தில் நடித்தபோது பாலகிருஷ்ணாவின் தோள்பட்டையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து வலி இருந்து வந்ததால் ஐதராபாத்திலுள்ள உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று பாலகிருஷ்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சைக்குப் பிறகு பாலகிருஷ்ணா நலமுடன் இருப்பதாகவும், அடுத்த மாதம் முதல் என்டிஆர் வாழ்க்கை வரலாறு படவேலைகளில் அவர் ஈடுபடுவார் என்றும் பாலகிருஷ்ணா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையிலிருந்து அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.