ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எது நடக்க கூடாது என பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் பயந்துகொண்டிருந்தாரோ, அதேபோலத்தான் ஆகிவிட்டது.. ஆம். சமீபத்தில் மோகன்லால் மகன் பிரனவை வைத்து அவர் இயக்கிய ஆதி படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது அவர் எதிர்பார்த்தது போலவே இது என்னுடைய கதை என எழுத்தாளர் ஒருவர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த எழுத்தாளர் வி.எஸ்.ஜெயகுமார் என்பவர், 2011ல் தான் எழுதி புத்தகமாக வெளிவந்த 'வீக் என்ட் பார்ட்டி' என்கிற கதையைத்தான் ஜீத்து ஜோசப் 'ஆதி' என்கிற பெயரில் படமாக்கியுள்ளார் என முதல்வருக்கே புகார் மனு அனுப்பியுள்ளார்.
ஆனால் இதை மறுத்துள்ள ஜீத்து ஜோசப், ஆதி தனது வாழ்க்கையில் தானே நேரில் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை வைத்து உருவாக்கிய கதை என கூறியுள்ளார். இதேபோலத்தான் 'த்ரிஷ்யம்' படம் வெளியானபோது அது தன்னுடைய கதை என ஒருவர் நீதிமன்றம் செல்ல, அதில் ஜீத்து ஜோசப்புகே வெற்றி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.