இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து |
ஜெய்சிம்ஹா படத்தை அடுத்து தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து நடிக்கிறார் பாலகிருஷ்ணா. தேஜா இயக்கும் இந்த படத்தின் பிரீ புரொடக்சன்ஸ் வேலைகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கு சில முன்னணி நடிகர் நடிகைகளிடம் பேசி வருகிறார் பாலகிருஷ்ணா.
மேலும், என்டிஆர் முதலமைச்சரானபோது அவருக்கும், அப்போதைய பிரதமரான இந்திராகாந்திக்குமிடையே அரசியல் ரீதியாக மோதல் நடந் தது. அதனால் அந்த காட்சிகளும் படத்தில் முக்கியத்துவம் பெறுகிறதாம். ஆனால் இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க பவர்புல்லான நடிகை வேண்டும் என்பதால், விஜயசாந்தி, ரம்யாகிருஷ்ணன், நதியா ஆகிய மூன்று பேரில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பரிசீலனை செய்து வருகிறார் பாலகிருஷ்ணா.